கனவுகளின் எல்லை

கனவுகள் கலைந்தாலும் மனம் கலைந்து விடக்கூடாது என்பதையே இந்தக் கவிதை உணர்த்துகிறது. தோல்வி, எதிர்ப்பு, வேதனை அனைத்தையும் தாண்டி நம்பிக்கையுடன் முன்னேறுவதே உண்மையான வெற்றி என்பதை வலியுறுத்துகிறது. வானத்தைத் தொடும் உயர்ந்த இலக்கை நோக்கி இடைவிடாமல் பயணிக்கும் மன உறுதியின் குரலே இந்தக் கவிதை.

Arul Pandiyarasan

5/22/2005

கனவுகள் கலைந்தாலும்

மீண்டும் காண்கிறேன்

கைவிடப்பட்டாலும்

கலங்கி நிற்பதில்லை

தோல்வியுற்றாலும்

மீண்டும் எழுகிறேன்

நம்பினோர் எதிர்த்தாலும்

நம்பிக்கை குறைவதில்லை

அழுகையை அடக்கி
மனதை காயப்படுத்தவில்லை
தோல்வியே முடிவென்று
ஒருநாளும் நினைப்பதில்லை

சோர்ந்து நின்றுவிட
என் மனம் பழகவில்லை

வானம் தொடுவதே

என் கனவுகளின் எல்லை

சிந்தனைகள் சிதறினாலும்

வாழ்க்கை சிதறுவதில்லை

வெற்றி பெறாமல்
என் பயணம் முடிவதில்லை

இந்த கனவுகள் இல்லாமல்

நான் இல்லை

அதை நனவாக்குவதே
எந்தன் வாழ்வின் எல்லை

தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.